Thursday, 18 November 2010

காய்கறி சாம்பார்

  • துவரம்பருப்பு -1கப்
  • முருங்கைகாய் -1
  • கேரட் -1
  • கத்தரிக்காய் -1
  • பீன்ஸ்-4
  • தக்காளி -1
  • சின்னவெங்காயம் -5
  • சாம்பார்பொடி -2ஸ்பூன்
  • மஞ்சள்பொடி -1/2ஸ்பூன்
  • உப்பு -தேவையான அளவு
  • புளி -நெல்லிக்காய் அளவு
  • தாளிக்க:
  • எண்ணை -2ஸ்பூன்
  • கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு -1ஸ்பூன்
  • பெரிய வெங்காயம் -பாதியளவு
  • காய்ந்தமிளகாய் -2
  • கறிவேப்பிலை -சிறிது
  • பெருங்காயம் -1/2ஸ்பூன்
  • கொத்தமல்லிதழை -சிறிது

  • பருப்பை குக்கரில் தேவையான தண்ணிர் ஊற்றி வேகவைக்கவும்.
  • காய்களை சிறிதாக நறுக்கவும்.
  • சின்னவெங்காயத்தை தோல் உரித்துவைக்கவும்.தக்காளி நறுக்கிவைக்கவும்.புளியை ஊறவைத்து கரைத்துவைக்கவும்.
  • குழம்புவைக்கும் பாத்திரத்தில் வெந்த பருப்பை போட்டு,நறுக்கிய காய்கள்,சின்னவெங்காயம்,தக்காளி போட்டு சாம்பார்பொடி,மஞ்சள்பொடி போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
  • காய்கள் பாதி வெந்தவுடன் கரைத்துவைத்திருக்கும் புளியை ஊற்றி தேவையான உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
  • வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு பருப்புகளை போட்டு நறுக்கிய வெங்காயம்,இரண்டாக கிள்ளிய மிளகாய்,கறிவேப்பிலை போட்டு தாளித்து,பெருங்காயம் போட்டு கொதிக்கும் குழம்பில் கொட்டி கொத்தமல்லிதூவி இறக்கவும்.
  • கமகம சாம்பார் ரெடி.

Friday, 17 September 2010

வத்தக்குழம்பு


  • புளி - 2 எழுமிச்சம் பழ அளவு,
  • துவரம்பருப்பு - 1 டீஸ்பூன்,
  • தேங்காய் துருவல் - 1/2 மூடி,
  • மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,,
  • உளுந்து அப்பளம் - 1,
  • பெருங்காயம் - சிறிது,
  • மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
  • பூண்டு - 5 பல்,
  • வெல்லம் - சிறிது,
  • கறிவேப்பிலை - சிறிது,
  • கடுகு - 1/2 டீஸ்பூன்,
  • உப்பு - தேவையான அளவு,
  • எண்ணெய் - 1 ஸ்பூன்,
  • நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்,
  • மணத்தக்காளி வத்தல் - 1 கைப்பிடி.

  • புளியை 2 டம்ளரில் ஊற வைத்து, கரைத்து வடி கட்டவும்.
  • வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, துவரம்பருப்பு, பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • துவரம்பருப்பு சிவந்தவுடன், அப்பளத்தை பொடியாக ஒடித்து போடவும்.
  • அப்பளம் பொரிந்தவுடன், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிய பின், புளி கரைசலை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
  • தேங்காயை நைசாக அரைக்கவும்.
  • வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, வத்தல் சேர்த்து, பொரிந்தவுடன், நசுக்கிய பூண்டு, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து, தேங்காய் வாசம் வரும் வரை வதக்கவும்.
  • வதங்கிய பின், கொதித்துக் கொண்டிருக்கும் புளி கரைசலில் கொட்டி, வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.
  • குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் வரை அடுப்பில் வைத்து எடுக்கவும்.